Friday, February 10, 2017

மதம் பிடித்த வண்டுகள்

ஒரு பூ மலர்ந்திருக்கிறது
எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்று செடிகள் போதித்த
போதனைகளோடு
ஒரு பூ மலர்ந்திருக்கிறது.
பிறந்த போதிலிருந்தே
செடிகளின் போதனைகளோடு
மலர்ந்த அப் பூ
கனியாகும் வரை
நீங்கள் எதிர்பார்க்கும்
ஒழுக்கத்துடனேயேதான் வளரும்.
வண்டுகளுக்குத்தான்
போதனைகள் சொல்லப்படவில்லை
இப்பூங்காவில்.


-உழவன்

1 comment: