"பாரதியார் புக்கை எடுத்துக் குடுங்கப்பா" என நேற்று அகமதி வெண்பா கேட்டாள். எடுத்துக் கொடுத்தவுடன், அதனை அம்மாவிடம் காட்டி, "அம்மா எனக்கு ஓடி விளையாடு பாப்பா சொல்லிக்கொடு" என்றாள். அதற்கு உனக்குத்தான் ஓடி விளையாடு பாப்பா தெரியும்ல; சொல்லு பார்ப்போம் என்றவுடன் "மறந்து போச்சுப்பா" என்றாள்.
ஏற்கனவே அவளுக்கு இப்பாடலை சொல்லிக்கொடுத்திருக்கிறோம். கடந்த ஆண்டு நடந்த மாறுவேடப் போட்டியில் இப்பாடலைச் சொல்லியிருக்கிறாள்.
தெரிந்தவரை சொல்லு; ஞாபகம் இருக்கானு பார்க்கலாம் என்றேன்.
சொல்ல ஆரம்பித்தாள் ...
"ஓடி விளையாடு பாப்பா
கீழே விழுந்திருவ பாப்பா
மெதுவா விளையாடு பாப்பா
கீழே விழ மாட்ட பாப்பா"
ஏற்கனவே அவளுக்கு இப்பாடலை சொல்லிக்கொடுத்திருக்கிறோம். கடந்த ஆண்டு நடந்த மாறுவேடப் போட்டியில் இப்பாடலைச் சொல்லியிருக்கிறாள்.
தெரிந்தவரை சொல்லு; ஞாபகம் இருக்கானு பார்க்கலாம் என்றேன்.
சொல்ல ஆரம்பித்தாள் ...
"ஓடி விளையாடு பாப்பா
கீழே விழுந்திருவ பாப்பா
மெதுவா விளையாடு பாப்பா
கீழே விழ மாட்ட பாப்பா"
- உழவன்
5 comments:
ஹா... ஹா... ரசித்தேன்...
புது பாட்டு அருமை ..!
தங்கையை மனதில் வைத்தபடி பாடியிருக்கிறாள்:)!
க்யூட்! :)
Visit : http://veeduthirumbal.blogspot.com/2013/06/blog-post_18.html
Post a Comment