Sunday, June 28, 2009

தூறல்

வானமென்ன
வயல் காட்டிலா
உழைத்தது . . .

இவ்வளவு
வியர்வைத் துளிகள் !

உழவன்

19 comments:

அமுதா said...

பூமியின் நிலை கண்டு
பூத்த
கண்ணீர்த் துளிகளோ?

ராமலக்ஷ்மி said...

அருமை உழவன்.

அமுதாவின் பின்னூட்டமும் அழகு.

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா இருக்கு உழவன்

தமிழ் said...

அருமையான வரிகள்

/இந்த வரிகளைப் படிக்கும்போது
சி.கருணாகரசு அவர்களின் வரிகள் தான்
நினைவிற்கு வருகிறது

உழுதவன் கண்ணீரை
அழுதே துடைத்தது
வானம்/

அன்புடன்
திகழ்

SUMAZLA/சுமஜ்லா said...

பன்னீர்த்துளிகளாய் மாறிய
பனித்துளிகள்,
உம் கற்பனையில்,
வியர்வைத்துளியாகவும்
கண்ணீர்த்துளியாகவும்
மாறியது அருமை!

இத்துளிகளையெல்லாம் நம்மூர் ஆற்றுக்கு திருப்பி விடுங்கள், தண்ணீர்பஞ்சமாவது தீரட்டும்.!

SUMAZLA/சுமஜ்லா said...

ஒரு சிறிய வேண்டுகோள்;

கூகுள் ரீடரின் மூலமாக வந்தாலன்றி, முந்தய பதிவுகள் கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்திய பதிவுகள் விட்ஜெட் போடலாமே.

Add a gadget போய், feeds என்பதை செலக்ட் பண்ணி, http://tamiluzhavan.blogspot.com/feeds/posts/default என்ரு கொடுத்து விட்டால் போதும்.

"உழவன்" "Uzhavan" said...

//அமுதா
பூமியின் நிலை கண்டு
பூத்த
கண்ணீர்த் துளிகளோ? //

ஆஹா.. அழகான வரிகள்.. இதுதான் மிகச்சரியான வரிகள் என்றே கருதுகிறேன்.
வலைச்சர ஆசிரியரா அப்பாயிண்ட்மெண்ட் ஆனதுக்கு வாழ்த்துக்கள் :-)

"உழவன்" "Uzhavan" said...

//ராமலக்ஷ்மி
அருமை உழவன்.
அமுதாவின் பின்னூட்டமும் அழகு.//

ஆமா.. அவரின் பின்னூட்டம் மிக அழகு.. வியந்தேன்.

"உழவன்" "Uzhavan" said...

//S.A. நவாஸுதீன்
ரொம்ப நல்லா இருக்கு உழவன்//

நன்றி நண்பரே..

"உழவன்" "Uzhavan" said...

//திகழ்மிளிர்
அருமையான வரிகள்
/இந்த வரிகளைப் படிக்கும்போது
சி.கருணாகரசு அவர்களின் வரிகள் தான்
நினைவிற்கு வருகிறது

உழுதவன் கண்ணீரை
அழுதே துடைத்தது
வானம்/

அன்புடன்
திகழ்//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. உழவனின் நிலைமையை அழகாக கருணாகரசு அவர்கள் சொல்லியிருக்கிறார். மிக்க மகிழ்ச்சி

"உழவன்" "Uzhavan" said...

//SUMAZLA/சுமஜ்லா
இத்துளிகளையெல்லாம் நம்மூர் ஆற்றுக்கு திருப்பி விடுங்கள், தண்ணீர்பஞ்சமாவது தீரட்டும்.! //

பாராட்டுக்கு மிக்க நன்றி.. ஒருநாள் ஆறே இல்லாமல் போகப்போகிறது. அப்போது என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை :-(

"உழவன்" "Uzhavan" said...

//SUMAZLA/சுமஜ்லா
ஒரு சிறிய வேண்டுகோள்;
கூகுள் ரீடரின் மூலமாக வந்தாலன்றி, முந்தய பதிவுகள் கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்திய பதிவுகள் விட்ஜெட் போடலாமே//

நிச்சயம் போடுகிறேன் தோழி சுகைனா அவர்களே.. என் வலையானது 2 column தான்.. அதை 3 column ஆக மாற்றவேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டே இருக்கிறேன் ஆனால் முடியவில்லை. காரணம் நான் அலுவலக PC யைத்தான் பயன்படுத்துகிறேன். விரைவில் இந்த புதிய gadget போட முயல்கிறேன். மிக்க நன்றி :-)

ஆ.ஞானசேகரன் said...

உங்களின் வரிகளும் அமுதாவின் வரிகளும் அருமை....

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்தப் பதிவும் அருமை, அதற்கு வந்த ஆரோக்கியமான பின்னூட்டங்களும் அருமை உழவன்.

"உழவன்" "Uzhavan" said...

//ஆ.ஞானசேகரன்
உங்களின் வரிகளும் அமுதாவின் வரிகளும் அருமை....//

//அமிர்தவர்ஷினி அம்மா
இந்தப் பதிவும் அருமை, அதற்கு வந்த ஆரோக்கியமான பின்னூட்டங்களும் அருமை உழவன்.//

இருவருக்கும் மிக்க நன்றி :-)

தேவன் மாயம் said...

வானத்தைப் பார்த்து உழவன் கேட்கும் அருமையான கேள்வி!!

"உழவன்" "Uzhavan" said...

//thevanmayam
வானத்தைப் பார்த்து உழவன் கேட்கும் அருமையான கேள்வி!! //
 
வாங்க தேவா சார். மிக நன்றி

SUFFIX said...

சான்ஸே இல்லை அண்ணே!! 'நச்' வரிகள்

"உழவன்" "Uzhavan" said...

வாங்க ஷஃபி.. முதல் வருகை. மகிழ்ச்சி.