Monday, September 1, 2008

பக்கத்தில் வா...

கண்ணடித்தேன்
கை பிடிப்பதற்காக !
 
புன்னகைத்தேன்
நாணம் காண்பதற்காக !
 
முத்தமிட்டு
பறக்கவிட்டேன் - அவள்
அச்சம் காண்பதற்காக !
 
இத்தனையையும்
பயந்து பயந்து
செய்த என்னிடம்,
பயப்படாமல்
சாடை காட்டினாள்
பக்கத்தில் வா என்று !
 

No comments: