Tuesday, January 26, 2021

ஆள் பாதி

 


சர்க்கரைப் பொங்கல்
வாழைப்பழம் என
எல்லோர் வீட்டிலிருந்தும்
ஏதாவதொன்று
கிடைத்துக்கொண்டே இருந்தது
அந்தப்
பூம்பூம் மாட்டிற்கு.
வண்ண வண்ண ஆடைகள்
மற்றும் ஆபரணங்களின்
கனவோடு
பூம்பூம் மாட்டையே
பார்த்துக் கொண்டிருந்தது
ஒரு பசித்த நாய்
அத்தெருவோரத்தில்.
-உழவன்

No comments: