Monday, July 18, 2016

பிரியாணி

பிரியாணியில் இத்தனை வகையா
என்று நான் அறிந்திருக்கவில்லை
பிரியாணிக்கென பிரத்யேகமான 
அரிசிகள் இருப்பதும் தெரியாது
அரிசியை வீட்டில் எப்படிச்
சமைப்பார்களோ அப்படித்தான்
பிரியாணியையும் சமைப்பார்கள் என
நினைத்திருந்த எனக்கு
பிரியாணி சமைப்பதிலும்
பல முறைகள் இருப்பது தெரியாது.
அழுது அடம்பிடித்த பின்
சுப்பம்மா பாட்டி வாங்கிக் கொடுத்த
முதல் பொட்டலத்தை
பிரியாணி என்று மட்டுமே
அறிந்துவைத்திருந்தேன்.
- உழவன்

2 comments:

Yaathoramani.blogspot.com said...

ருசிக்கிறது
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

பிரியாணி எனச் சொல்லி
வாங்கிக் கொடுத்த...
எனச் சொன்னால் இன்னும் ருசிக்குமோ ?