Monday, June 15, 2015

முதல் விருது - "செல்ஃபி சூழ் உலகு"

ஆர். கே. வி. பவுண்டேசன் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவின் சார்பில் நடைபெற்ற குறும்படப் போட்டி, கோவை ஆர்.எஸ். புரம் மாநகராட்சிக் கலையரங்கில், கடந்த  சனிக்கிழமை (13.06.2015) நடைபெற்றது. இப்போட்டியில் 49 குறும்படங்கள் கலந்துகொண்டன. முதல் பத்து இடங்களைப் பெரும் குறும்படங்களுக்கு பரிசும், இதில் முதல் மூன்று இடங்களைப் பெரும் குறும்பட இயக்குநர்களுக்கு பெரும்படம் இயக்கம் வாய்ப்பும் வழங்கப் பட்டது.

இப்போட்டியில் கலந்துகொண்டு, பத்தாவது இடத்தை "செல்ஃபி சூழ் உலகு" குறும்படம் பெற்றது என்பதை மிக மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.


 6 நிமிடம் 36 வினாடிகள் ஓடக்கூடிய இப்படம், பார்ப்பவர்களுக்கு கொஞ்சமாவது பிடித்திருக்குமா, அவர்கள் மனதினில் ஏதேனும் ஒருவித உணர்வை ஏற்படுத்துமா என்கிற எதுவும் தெரியாமல், ஒருவிதக் குழப்பத்துடனேயே அமர்ந்திருந்தோம்.

படம் ஆரம்பித்த மூன்றரை நிமிடத்தில் விழுந்த கைதட்டல்கள் "செல்ஃபி சூழ் உலகு" க்குக் கிடைத்த முதல் அங்கீகாரம். அதன் பின்பான காட்சிகளின் முடிவில், பலத்த கைதட்டல்களோடு படம் நிறைவுபெற்றது மிக்க மகிழ்ச்சியைத் தந்ததோடு, பார்ப்பவர்களை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் தருணமாகவும் அமைந்தது.


ஏற்கனவே சொன்னதுபோல், சினிமா பற்றிய எந்தவித அனுபவமும் இல்லாமல், ஏதோ ஒரு நம்பிக்கையில் எடுக்கப்பட்ட இக்குறும்படம் முதல் அங்கீகாரத்தைப் பெற்றதில் மிக்க மகிழ்ச்சியும், எனக்கு உறுதுணையாய் நின்ற நண்பர்களுக்கு நன்றியும்.


1 comment:

ராமலக்ஷ்மி said...

மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள். படத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.