Monday, May 7, 2012

வெயில்குடை

மடித்த குடையோடு

மழையில் நனைந்துகொண்டே வந்த

எதிர்வீட்டுத் தோழி

வெயிலுக்காகத்தான்

குடை கொண்டுசென்றேன்

மழைக்காக அல்ல

என்கிறாள்.

மழை மகிழ்ச்சியில்

மீண்டும் மீண்டும்

பெய்துகொண்டேயிருக்கிறது.

4 comments:

ராமலக்ஷ்மி said...

/வெயிலுக்காகத்தான்

குடை கொண்டுசென்றேன்

மழைக்காக அல்ல

என்கிறாள்./

அருமை:)!

அக்னி நட்சத்திர வெயிலுக்கு சில்லென்று ஒரு கவிதை.

தொடர்ந்து எழுதவும்.

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...
தொடர்ந்து எழுதுங்க...
வாழ்த்துக்கள்.

செய்தாலி said...

ம்ம்ம்.. அருமை சார்

Kavinaya said...

ச்வீட் :)