Sunday, November 21, 2010

என் முதல் கவிதைத் தொகுப்பு

எழுதிய முதல் கவிதையே
இதழில் வெளியாகிவிட்டது.
அடுத்த கவிதையை இப்போதே
எழுதியாக வேண்டும் என்ற ஆர்வத்தில்
காகிதத்தையெடுத்துக் கவிதைக்கான தலைப்பிடுகிறேன்.
 
"எனது முதல் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்கு
ஆயிரக்கணக்கானோர் வந்திருக்கிறார்கள்.
பாராட்டுக்கள் குவிகின்றன
அனைத்துப் புத்தகங்களும்
அப்போதே விற்றும் தீர்ந்துவிட்டன"
 
இந்தக் காட்சிகள் மாறி மாறி
என் கண் முன்னால் வந்துகொண்டிருக்க
என்னை நானே சுயத்திற்கு அழைத்து
முதல் வரியை எழுத விழைகையில்
அக்காகிதம் காற்றிற்குத் திடீரென பறந்துவிட
அதனை எட்டிப் பிடிக்க முயல்கிறேன்.
 
பொத்தென்று கட்டிலில் இருந்து உருண்டு
விழுந்தவுடன் விழித்துப் பார்க்கிறேன்
எல்லோரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இம்மாதமும் என் கவிதை வராத்தால்
படிக்காமலேயே மேஜை மீது போடப்பட்ட இதழ்
மின்விசிறிக் காற்றுக்குப் படபடத்துக் கொண்டிருக்கிறது
என் மனசு போலவே.
 
உழவன்

18 comments:

சந்தனமுல்லை said...

:-)

Gud one..

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை:))!

கனவு கண்டிப்பாய் நிறைவேறும்:)!

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!!

sakthi said...

நல்ல கவிதை உழவரே

'பரிவை' சே.குமார் said...

முதல் கவிதை தொகுப்பு வந்தாச்சின்னு சந்தோஷமா வந்தா கனவுன்னு கவுத்துட்டிங்களே... பரவாயில்லை... விரைவில் வெளியாக வாழ்த்துக்கள்.

Vidhya Chandrasekaran said...

:)

கனவு பலிக்க வாழ்த்துகள்..

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் நண்பா,...

அருமை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)
ஆமா அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

vasu balaji said...

அஹா. அப்புடியா கதை

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

"உழவன்" "Uzhavan" said...

 @சந்தனமுல்லை
@ராமலக்ஷ்மி
@sakthi
@சே.குமார்
@வித்யா
@ஆ.ஞானசேகரன்
@முத்துலெட்சுமி/muthuletchumi
@வானம்பாடிகள்
@T.V.ராதாகிருஷ்ணன்

என் கவிதைத் தொகுப்பையெல்லாம் எல்லாரும் எதிர் பார்க்குறீங்களா? எல்லாருக்கும் ரொம்ப தைரியம்தான் :-)
எல்லார்க்கும் ரொம்ப நன்றிங்க..

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் தலைவரே... நடத்துங்க... கனவுகள் அப்படியே பலிக்கட்டும்...

எல் கே said...

விரைவில் உங்கள் கவிதைத் தொகுப்பு வெளிவர வாழ்த்துக்கள்

நசரேயன் said...

கவுஜ எழுதுங்க

இ.பா.சிந்தன் said...

"காலம் ஒருநாள் மாறும் - என்
கவிதை உலகம் படும்!
காணும் கண்கள் யாவும் - என்
கவிதை நயத்தைதேடும்!"

-எங்கேயோ படித்தது நினைவுக்கு வருகிறது...
வாழ்த்துகள்...

ஹேமா said...

கனவிலயும் கவிதையும் எழுத்தும்தானா.கனவு நிச்சயம் ஒருநாள் பலிக்கும்தானே !

"உழவன்" "Uzhavan" said...

@க.பாலாசி
@LK
@நசரேயன் - முயற்சி பண்ணுறேன் நண்பா
@Chinthan
@ஹேமா
 
அனைவருக்கும் மிக்க நன்றி.
தமிழ்மணம் மற்றும் இண்ட்லியில் வாக்களித்தோருக்கும் நன்றி

Kavinaya said...

//கனவு கண்டிப்பாய் நிறைவேறும்:)!

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!!//

ரிப்பீட்டேய்... :)

"உழவன்" "Uzhavan" said...

கவிநயா
ரிப்பீட்டேய்... :) //
மிக்க நன்றி