Monday, March 22, 2010

தொடரும்...

நிம்மதி வேண்டி அலையும்
ராமாபுரம் ரஞ்சிதா
ஆசிரமம் நோக்கிச் செல்கிறாள்
 
நோயாளிகளின் எண்ணிக்கை
உயர்த்தவேண்டி
அபிஷேகம் செய்துகொண்டிருக்கிறான்
மருத்துவமனை முதலாளி
 
பத்தே நாளில் ஆங்கிலம் பேசலாம்
என வந்த குறுஞ்செய்தியைக் கண்டு
முகவரி தேடி ஓடுகிறான் இளைஞனொருவன்
 
எந்தச் சேனலில் இருந்தும்
எந்த மாதிரியான காட்சிகளும் வரக்கூடும்
என்ற பதைபதைப்போடு
குழந்தைகளுடன்
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறாள்
சாராசரித் தாய் ஒருத்தி
 
சிறு சிறு ஆணிகளை
சாலையின் நடுவே தூவிவிட்டு
சாலையோரமாய் தயார் நிலையிலிருக்கிறான்
பஞ்சர் பார்க்கும்
குழந்தைத் தொழிலாளியொருவன்
 
பயமாய் இருக்கிறது
ஒவ்வொரு காட்சியின் முடிவிலும்
தொடரும்... எனப் போடும்போது
பயமாகவே இருக்கிறது.
 
உழவன்

39 comments:

Unknown said...

நல்லா இருக்குங்க.

தமிழ் உதயம் said...

தொடரும்... படக்காட்சிக்கே இந்த பயம் என்றால்- நிஜக்காட்சியின் போது என்ன செய்வீர்கள்.

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு..

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாருக்கு..

SUFFIX said...

நல்லா இருக்கு உழவரே, பயமாகவே இருக்கிறது.

ராமலக்ஷ்மி said...

//பயமாய் இருக்கிறது
ஒவ்வொரு காட்சியின் முடிவிலும்
தொடரும்... எனப் போடும்போது
பயமாகவே இருக்கிறது.//

நல்ல கவிதை. பயமாகவே இருக்கிறது.

விக்னேஷ்வரி said...

ரொம்ப எதார்த்தமா இருக்கு, பயமாவும்.

விக்னேஷ்வரி said...

நல்லாருக்கு.

இதை விட்டுட்டேனே போன பின்னூட்டத்துல.

க.பாலாசி said...

நெஜமாவே இதெல்லாம் தொடருமோன்னு பயமாத்தாங்க இருக்கு....

"உழவன்" "Uzhavan" said...

@செல்வராஜ் ஜெகதீசன் - மிக்க நன்றி
 
@தமிழ் உதயம் - நிஜக் காட்சி வேறயா? :-) மிக்க நன்றி.
 
@வித்யா - மிக்க நன்றிங்க
 
@T.V.ராதாகிருஷ்ணன்  - மிக்க நன்றி

"உழவன்" "Uzhavan" said...

@SUFFIX  - பயமாத்தான் இருக்கு. என்ன பண்ண?
 
@ராமலக்ஷ்மி - பயப்படாதீங்க. மனதை நல்ல தைரியமா வச்சிக்கோங்க :-)
 
@விக்னேஷ்வரி - ரொம்ப நன்றிங்க
 
@க.பாலாசி - நன்றி பாலாஜி

பத்மா said...

நல்லா இருக்கு கவிதை
தார்மிக பயம்

மாதேவி said...

நல்ல கவிதை.

தொடரும் பயம்......முடிவேது.

Anonymous said...

tv serial parkum thaikulangale bayapadathapothu ungalukku een bayam.tv serialil than ella villigalum irukkanga.evvalavo parthuttom .idhai pakka maattoma.eppppodi.

'பரிவை' சே.குமார் said...

பயமா இருக்குன்னு சொல்லிக்கிட்டே தொலைக்காட்சியில எல்லாத்தையும் பார்த்துவிட்டீர் போலிருக்கே..?
அருமையான பதிவு.
என்னதான் நாம எழுதினாலும் நம் மக்கள் தங்கள் வாழ்க்கையையும் கோலங்களையும் மறந்து தானே இருகிறார்கள். (கோலங்கள், வாழ்க்கை பார்க்க தவறுவதில்லை)

Anonymous said...

enna seyya veettammavai disturb senja namma vazkai alangolamayirmla.enakkum thirumbi parka asai 1970 to 1990.tv pottikku adhu oru kanaakkalam.

கார்த்திகைப் பாண்டியன் said...

பைனல் டச் நல்லாயிருக்கு நண்பா

DREAMER said...

அருமை...

-
DREAMER

Chitra said...

பயமாய் இருக்கிறது
ஒவ்வொரு காட்சியின் முடிவிலும்
தொடரும்... எனப் போடும்போது
பயமாகவே இருக்கிறது.


........ நாட்டு நடப்பும் கூட. அது இன்னும் கலக்கமாய் இருக்கிறது.

விநாயக முருகன் said...

அருமை நண்பரே..ந‌ல்ல கவிதை

பித்தனின் வாக்கு said...

// பயமாய் இருக்கிறது
ஒவ்வொரு காட்சியின் முடிவிலும்
தொடரும்... எனப் போடும்போது
பயமாகவே இருக்கிறது. //
உண்மைதாங்க. அதுனாலதான் நீங்களும் கவிதையின் முடிவில் தொடரும் போடுவிங்களேன்னு பயந்துட்டேம். ஹா ஹா

நல்ல கவிதை, உழவன்.மிக அருமை. நல்ல சிந்தனை.

Anonymous said...

தொடர்களையும் உழறீங்க போல....

"உழவன்" "Uzhavan" said...

நன்றி padma
 
நன்றி மாதேவி
 
நன்றி அனானி - இது யாருனு தெரியலயே. பேரு போட்டிருக்கலாம்ல
 
நன்றி சே.குமார்
 
நன்றி கார்த்திகைப் பாண்டியன் நண்பா

"உழவன்" "Uzhavan" said...

நன்றி Chitra
 
நன்றி என்.விநாயகமுருகன்
 
நன்றி பித்தனின் வாக்கு
 
நன்றி தமிழரசி
 
நன்றி Dreamer

"உழவன்" "Uzhavan" said...

தமிலிஷ்ல் வாக்களித்த அனைவருக்கும் நன்றி (தமிழ்மணத்துல மட்டும் ஏன் ஓட்டு போட மாட்டிக்கிறீங்கன்னுதான் தெரியல :-))

ராமலக்ஷ்மி said...

//தமிழ்மணத்துல//

நான் எப்போதும் போடுகிறேன்:)!

பனித்துளி சங்கர் said...

////////எந்தச் சேனலில் இருந்தும்
எந்த மாதிரியான காட்சிகளும் வரக்கூடும்
என்ற பதைபதைப்போடு
குழந்தைகளுடன்
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறாள்
சாராசரித் தாய் ஒருத்தி///////


சரியாக சொன்னீங்க இந்த அனுபவம் எனக்கும் உள்ளது

"உழவன்" "Uzhavan" said...

//ராமலக்ஷ்மி
//தமிழ்மணத்துல//
நான் எப்போதும் போடுகிறேன்:)! //

ஓ.. அப்ப ஒரு ஓட்டு எப்பவும் விழுகிறது. நன்றி :-)

"உழவன்" "Uzhavan" said...

//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
////////எந்தச் சேனலில் இருந்தும்
எந்த மாதிரியான காட்சிகளும் வரக்கூடும்
என்ற பதைபதைப்போடு
குழந்தைகளுடன்
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறாள்
சாராசரித் தாய் ஒருத்தி///////

சரியாக சொன்னீங்க இந்த அனுபவம் எனக்கும் உள்ளது //
 
மிக்க நன்றி சங்கர்

Radhakrishnan said...

எத்தனை அழகாக வாழ்க்கையைச் சொல்லி விட்டீர்கள்.

DREAMER said...

ரொம்ப நல்லாயிருக்குங்க...

-
DREAMER

சீனிவாசன் said...

மிகவும் அருமை நண்பரே!!!

vasu balaji said...

ஆமாங்க. பயமாத்தானிருக்கு

இரசிகை said...

nallaayirukkunga...:)

"உழவன்" "Uzhavan" said...

நன்றி சீனிவாசன் அவர்களே
 
நன்றி வானம்பாடிகள் ஐயா
 
மிக்க நன்றி இரசிகை

பத்மா said...

உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்து கொள்கிறேன் வந்து பெற்றுகொள்ளவும்

பா.ராஜாராம் said...

//தொடரும்... எனப் போடும்போது
பயமாகவே இருக்கிறது.//

கூடவே..

நல்லாவும் இருக்கிறது.

Dr. Srjith. said...

அருமையான சிந்தனை

"உழவன்" "Uzhavan" said...

நன்றி V.Radhakrishnan சார்

நன்றி பா.ராஜாராம் ஜி

விருதுக்கு நன்றி பத்மா ஜி :-)

நன்றி Dr. Srjith சார்