Sunday, March 7, 2010

கிளி பொம்மை

சாம்பல் நிறத்தில்
குட்டையான வாலோடு
மினுங்கும் கண்களுடன்
பாண்டிபஜாரில் வாங்கிய
நாயின் கழுத்தை
இறுக்கிப் பிடித்துக் கடித்தும்
வாலைப் பிடித்துத் தூக்கியெறிந்தும்
குழந்தை விளையாடியதைக் கண்டு பதறி
கயிற்றை அறுத்து
தலைதெறிக்க ஓடிய
என் வீட்டு நாய்
இன்னமும் வீடு திரும்பவில்லை
 
எதிர்வீட்டில்
கிளிஜோதிடர் இருக்கிறார்
எப்படியும் இரண்டு பேராவது
எதிர்காலம் அறியும் பொருட்டு வருவதை
தினமும் அலுவலகம் செல்லும்போது காண்கிறேன்.
 
விரைவில் ஒரு
கிளி பொம்மை வாங்கவேண்டும்!
 
உழவன்

27 comments:

"உழவன்" "Uzhavan" said...

மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

உழவன்

Vidhoosh said...

சீக்கிரம் வாங்குங்க. அப்ப்டிய யானை, பூனை பொம்மை எல்லாமும்.. :)

எழுதவும் கற்கிறேன் உங்களிடம். :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

அட!!

கவிதை சூப்பர், சீக்கிரம் பொம்மை வாங்கி கிளிக்கு விடுதலை அளியுங்கள் உழவன்

Anonymous said...

அப்ப கிளிக் கவிதை ரெடின்னு சொல்லு....

"உழவன்" "Uzhavan" said...

//Vidhoosh

எழுதவும் கற்கிறேன் உங்களிடம். :) //
 
ஐயோ.. என்ன பெரிய பெரிய வார்த்தையெல்லாம்.. நானும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன் விதூஷ் மேடம்.. மிக்க நன்றி இதுபோன்ற பெருந்தன்மையான வார்த்தைகளுக்கு.

"உழவன்" "Uzhavan" said...

//அமிர்தவர்ஷினி அம்மா

அட!!

கவிதை சூப்பர், சீக்கிரம் பொம்மை வாங்கி கிளிக்கு விடுதலை அளியுங்கள் உழவன் //
 
வாங்கிடலாம் அமித்துமா.. மிக்க நன்றி :-)

விநாயக முருகன் said...

சூப்பர் :)

மாதேவி said...

அசத்தல்.

ராமலக்ஷ்மி said...

//பதறி
கயிற்றை அறுத்து
தலைதெறிக்க ஓடிய
என் வீட்டு நாய்
இன்னமும் வீடு திரும்பவில்லை//

ரசித்துச் சிரித்தேன்.

கிளி பொம்மை வாங்கக் கிளம்புங்க:)!

T.V.ராதாகிருஷ்ணன் said...

கவிதை சூப்பர்

அன்புடன் நான் said...

நல்லாயிருக்கு.

கிளி வாங்குங்க வரேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

பைனல் டச் சூப்பர் நண்பா..

SUFFIX said...

உழவரின் எழுத்துக்களில் மிகுந்த முன்னேற்றம். நல்லா இருக்கு.

//தமிழரசி said...
அப்ப கிளிக் கவிதை ரெடின்னு சொல்லு....//

அட்டா..பளிச்..வரிகள்

ஜெனோவா said...

ரசித்தேன் ;-)

"உழவன்" "Uzhavan" said...

நன்றி என்.விநாயகமுருகன்
 
நன்றி மாதேவி
 
நன்றி T.V.ராதாகிருஷ்ணன்
 
நன்றி ராமலக்ஷ்மி
 
நன்றி சி. கருணாகரசு
 
நன்றி கார்த்திகைப் பாண்டியன் நண்பா

நன்றி SUFFIX
 
நன்றி ஜெனோ

சொல்லரசன் said...

பார்த்துங்க அப்புறம் வடிவேல்மாதிரி உங்களைவைத்து ஜோஸியம் சொல்லிவிடபோகிறார் உங்க எதிர்வீட்டுக்காரர்.

கவிதை அருமை

"உழவன்" "Uzhavan" said...

நன்றி சொல்லரசன் :-)

Priya said...

நல்லாயிருக்கு.

//விரைவில் ஒரு
கிளி பொம்மை வாங்கவேண்டும்//....ம்ம்...சீக்கிரம் வாங்கிடுங்க‌:)

"உழவன்" "Uzhavan" said...

நன்றி ப்ரியா.. நல்ல கிளி எங்க கிடைக்கும்னு சொல்லுங்க.. வாங்கிடலாம் :-)

மேடேஸ்வரன் said...

மிகவும் ரசித்தேன்...நண்பர்களுக்கும் மின்னஞ்சல் செய்துள்ளேன்.

Chitra said...

Good one!

"உழவன்" "Uzhavan" said...

//மேடேஸ்வரன்
மிகவும் ரசித்தேன்...நண்பர்களுக்கும் மின்னஞ்சல் செய்துள்ளேன். //
 
மிக்க மகிழ்ச்சி நண்பரே. வருகைக்கும் மின்னஞ்சலுக்கும் மிக்க நன்றி
 
*
 
//Chitra
Good one! //
 
பாராட்டுக்கும் மிக்க நன்றி சித்ரா

Anonymous said...

பதிப்புகள் அருமை உழவரே..

Anonymous said...

ரசித்தேன்..ருசித்தேன்

"உழவன்" "Uzhavan" said...

நன்றி படைப்பாளி

இரசிகை said...

:))

"உழவன்" "Uzhavan" said...

மிக்க நன்றி இரசிகை