Sunday, October 18, 2009

எங்கே என் நினைவு ?

நீ

நகம் வெட்டியதில்லை
வெட்டாத
ஆசை நகத்தின்
அழுக்கெடுத்ததில்லை

கொய்யா காய்
நறுக்கியதில்லை
சாத்துக்குடியின்
சேலை உரித்ததில்லை

குளிர்பானம்
திறந்ததில்லை
குதிகால் முள்
பிடுங்கியதில்லை

எந்த வேலையையுமே
உனக்குக் கொடுக்காமல்
எடுத்து எடுத்துப்
பார்த்துவிட்டு

அலமாரியை
அலங்கரிக்க மட்டுமே - நான்
அமரவைத்த
நகவெட்டியே . . .

மாயமாய்
மறைந்து போனது
எங்கே?

எப்போதும் விழித்திருக்கும்
என் வீட்டு
எறும்புகளே . . .

இருக்கும்
இடம் தெரிந்தால்
கொஞ்சம் சொல்லுங்களேன் !

என்னவளின்
நகத்தை மட்டுமே
சுவைத்த நாக்கு அது

அவளுக்குத் தெரியாமல்
நான்
எடுத்துவந்த
நினைவு அது !

உழவன்

19 comments:

க.பாலாசி said...

//என்னவளின்
நகத்தை மட்டுமே
சுவைத்த நாக்கு அது//

ஆஹா....என்னே கற்பனை வரிகள்...

//அவளுக்குத் தெரியாமல்
நான்
எடுத்துவந்த
நினைவு அது !//

அப்ப சுட்டுட்டு வந்திட்டீங்கன்னு சொல்லுங்க....

கவிதை நன்று அன்பரே.....

ஹேமா said...

தீபாவளிக்கு வீட்ல இருந்து எடுத்திட்டுவந்தது இதுதானா !வித்தியாசமா இருக்கு.நல்லாயிருக்கு.

S.A. நவாஸுதீன் said...

\\என்னவளின்
நகத்தை மட்டுமே
சுவைத்த நாக்கு அது\

ஆகா! ஆகா! என்னே ஒரு கற்பனை.
***********************************

\\நகம் வெட்டியதில்லை
வெட்டாத
ஆசை நகத்தின்
அழுக்கெடுத்ததில்லை//

அதுசரி உங்க நகவெட்டி எங்கே, அதையும் காணோமோ!. ஒருவேளை அவங்க சுட்டுருப்பாங்களோ! உங்களைமாதிரியே.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அட!

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா இருக்கு நண்பா..;-))

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அழகான கற்பனை. தொலைத்த பொருளை தேடி எடுத்திடுங்கோ.
அதில எத்தனை விடயம் இருக்கு!

ஆ.ஞானசேகரன் said...

[[என்னவளின்
நகத்தை மட்டுமே
சுவைத்த நாக்கு அது

அவளுக்குத் தெரியாமல்
நான்
எடுத்துவந்த
நினைவு அது !]]

அருமை!!
சுட்டுட்டு வந்த நகவெட்டியே
வந்துவிடு என் நண்பனிடம்...

Anonymous said...

WOWWWWWWWWWWWWWWWWWW என்னே காதலின் தன்மை.... SOOOOOOOOOOOOOOOO......SWEETTTTTTT

Jackiesekar said...

இப்படி லோகத்துல நிறைய பயல்கள் சுத்தி் திரியறானுங்கோ...

சொல்லரசன் said...

அருமையான‌ கற்பனை உழவன்,ஊருக்கு போய் வந்த உழவனின் அனுபவகவிதையை எதிர்பார்த்தேன்.

kanagu said...

supernga.. :)

"உழவன்" "Uzhavan" said...

க.பாலாஜி
ஹேமா
S.A. நவாஸுதீன்
அமிர்தவர்ஷினி அம்மா
கார்த்திகைப் பாண்டியன்
வித்யா
ஜெஸ்வந்தி
ஆ.ஞானசேகரன்
தமிழரசி
jackiesekar
சொல்லரசன்
kanagu

தொடர்ந்து ஊக்கம் தரும் அனைவருக்கும் என் நன்றிகள் என்றும் :-)

விக்னேஷ்வரி said...

அவளுக்குத் தெரியாமல்
நான்
எடுத்துவந்த
நினைவு அது ! //

நச். நல்லா இருக்கு.

ராமலக்ஷ்மி said...

நன்றாக உள்ளது:)!

//அவளுக்குத் தெரியாமல்
நான்
எடுத்துவந்த
நினைவு அது !//

அருமை உழவன்!

விஜய் said...

"சாத்துக்குடியின்
சேலை உரித்ததில்லை"

இதுவரை எங்கேயுமே கேட்டறியாத கற்பனை

சூப்பர்

வாழ்த்துக்கள்.

விஜய்

அமுதா said...

அருமை.

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

”எப்போதும் விழித்திருக்கும்
என் வீட்டு
எறும்புகளே . . .” - அழகான விஷயம் - உண்மையான - அதிகம் கவனிக்கபடாத விஷயமும் கூட.

"உழவன்" "Uzhavan" said...

நன்றி கோபாலகிருஷ்ணன்

இராஜராஜேஸ்வரி said...

அவளுக்குத் தெரியாமல்
நான்
எடுத்துவந்த
நினைவு அது !//
interesting.