Thursday, July 30, 2009

மானமுள்ள...


நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்துவங்கினர்

வாகனங்களின் வேகம்
சாலைகளில்
சற்றுக் கூடியிருந்தது

குடும்பத் தலைவிகள்
மாடிக்கு ஓடினர்

இவ்வளவு
நேரமாய்ப் போகாதவன்
இப்பொழுது பார்த்தா
செல்லவேண்டும் கடைவீதிக்கு
வாஞ்சையுடன்
வருத்தப்பட்டாள் அம்மா

குளிர்பானம் விற்பவன்
சலித்துக்கொண்டான்

வராந்தாவில் விளையாடிய
குழந்தைகள்
வீட்டினுள் அழைக்கப்பட்டு
கதவு சாத்தப்பட்டது.

"மதியாதார் வாசலை மிதிக்கவேண்டாம்"
பள்ளிக்கூட ஓடுகளில்
தவழ்ந்த துளிகளின்
காதுகளுக்குக் கேட்டிருக்கும்போலும்

திசைமாறி
கடல்வீட்டினுள்
ஆனந்தமாய்ப் பெய்துகொண்டிருந்தது
மானமுள்ள மழை!

உழவன்

நன்றி கீற்று.காம்

19 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

என்னங்க தமிழ்நாட்ல மழையா?

"உழவன்" "Uzhavan" said...

பிரியமுடன்.........வசந்த்
என்னங்க தமிழ்நாட்ல மழையா? //

ஆமா சார்.. இங்கு மழைதான் :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

திசைமாறி
கடல்வீட்டினுள்
ஆனந்தமாய்ப் பெய்துகொண்டிருந்தது
மானமுள்ள மழை!

மிகவும் ரசித்த வரிகள்

கவிதை மொத்தமும் அழகு எனக்கு எப்போதும் பிடிக்கும் மழையைப் போலவே !!!

சொல்லரசன் said...

//குடும்பத் தலைவிகள்
மாடிக்கு ஓடினர்//

அவ‌ர்க‌ள் க‌வ‌லை அவ‌ர்க‌ளுக்கு,
அருமையான‌ க‌விதை.

sakthi said...

குடும்பத் தலைவிகள்
மாடிக்கு ஓடினர்


வேற வழி

SUMAZLA/சுமஜ்லா said...

//"மதியாதார் வாசலை மிதிக்கவேண்டாம்"
பள்ளிக்கூட ஓடுகளில்
தவழ்ந்த துளிகளின்
காதுகளுக்குக் கேட்டிருக்கும்போலும்//

நான் ரசித்த வரிகள்.

ஆ.ஞானசேகரன் said...

//திசைமாறி
கடல்வீட்டினுள்
ஆனந்தமாய்ப் பெய்துகொண்டிருந்தது
மானமுள்ள மழை!//

எல்லா வரிகளுமே நல்லா இருக்கு நண்பா

"உழவன்" "Uzhavan" said...

//அமிர்தவர்ஷினி அம்மா
திசைமாறி
கடல்வீட்டினுள்
ஆனந்தமாய்ப் பெய்துகொண்டிருந்தது
மானமுள்ள மழை!

மிகவும் ரசித்த வரிகள்
கவிதை மொத்தமும் அழகு எனக்கு எப்போதும் பிடிக்கும் மழையைப் போலவே !!! //

மகிழ்ச்சியும் நன்றிகளும் அமித்துமா.

"உழவன்" "Uzhavan" said...

//சொல்லரசன்
//குடும்பத் தலைவிகள்
மாடிக்கு ஓடினர்//

அவ‌ர்க‌ள் க‌வ‌லை அவ‌ர்க‌ளுக்கு,
அருமையான‌ க‌விதை.//

சரிதான் நண்பா. நன்றி

"உழவன்" "Uzhavan" said...

Hi Uzhavan,

Congrats!

Your story titled 'மானமுள்ள...' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 31st July 2009 02:28:02 PM GMT


Here is the link to the story: http://www.tamilish.com/story/91209

Thank you for using Tamilish.com

Regards,

-Tamilish Team//

நன்றி தமிலிஸ்

"உழவன்" "Uzhavan" said...

//sakthi

குடும்பத் தலைவிகள்
மாடிக்கு ஓடினர்

வேற வழி//

அதுசரிதான். அவங்க அவங்க கவலை அவங்களுக்கு. நன்றி

"உழவன்" "Uzhavan" said...

SUMAZLA/சுமஜ்லா
//"மதியாதார் வாசலை மிதிக்கவேண்டாம்"
பள்ளிக்கூட ஓடுகளில்
தவழ்ந்த துளிகளின்
காதுகளுக்குக் கேட்டிருக்கும்போலும்//

நான் ரசித்த வரிகள். //

ரசித்தமைக்கு நன்றி

"உழவன்" "Uzhavan" said...

ஆ.ஞானசேகரன்
//திசைமாறி
கடல்வீட்டினுள்
ஆனந்தமாய்ப் பெய்துகொண்டிருந்தது
மானமுள்ள மழை!//

எல்லா வரிகளுமே நல்லா இருக்கு நண்பா //


மிக்க நன்றி நண்பா

S.A. நவாஸுதீன் said...

"மதியாதார் வாசலை மிதிக்கவேண்டாம்"
பள்ளிக்கூட ஓடுகளில்
தவழ்ந்த துளிகளின்
காதுகளுக்குக் கேட்டிருக்கும்போலும்

அருமை உழவரே.

கவிதை ரொம்ப நல்லா இருக்கு.

SUFFIX said...

நல்ல மழை நன்பரே!!

"உழவன்" "Uzhavan" said...

//S.A. நவாஸுதீன்
"மதியாதார் வாசலை மிதிக்கவேண்டாம்"
பள்ளிக்கூட ஓடுகளில்
தவழ்ந்த துளிகளின்
காதுகளுக்குக் கேட்டிருக்கும்போலும்

அருமை உழவரே.
கவிதை ரொம்ப நல்லா இருக்கு. //
 
*
ஷஃபிக்ஸ்
நல்ல மழை நன்பரே!!
 
ரொம்ப மகிழ்ச்சி தோழர்களே!! வருகைக்கு நன்றி

பிரவின்ஸ்கா said...

கவிதை அருமை .

- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

"உழவன்" "Uzhavan" said...

//பிரவின்ஸ்கா
கவிதை அருமை .

- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா //

நன்றி நண்பா

ராமலக்ஷ்மி said...

//"மதியாதார் வாசலை மிதிக்கவேண்டாம்"
பள்ளிக்கூட ஓடுகளில்
தவழ்ந்த துளிகளின்
காதுகளுக்குக் கேட்டிருக்கும்போலும்

திசைமாறி
கடல்வீட்டினுள்
ஆனந்தமாய்ப் பெய்துகொண்டிருந்தது
மானமுள்ள மழை!//

அடடா? இப்படித்தான் நாட்டில் மழை இல்லாது போகிறதா:(?

நல்ல கவிதை உழவன்:)!