Wednesday, May 14, 2008

அன்னையே மன்னித்து விடு!

அன்னையே
என் கால்களை
மன்னித்து விடு !

கூட்டத்தில் நடந்தால்கூட
யார் மேலும்
பட்டுவிடக்கூடாதென
எட்டு மேல் எட்டு வைத்து
நடக்கும் கால்களே...

உன்னால்
கருவறையை மட்டும்
எப்படி
உதைக்க முடிந்தது?

கருவறை உதைத்த
கால்களைக்
கையில் தூக்கிக்
கொஞ்சியவளே...
என் கால்களை
மன்னித்து விடு !

உழவன்
tamil.uzhavan@gmail.com
http://tamiluzhavan.blogspot.com
http://tamizhodu.blogspot.com

2 comments:

SUFFIX said...

வலைச்சரத்தின் மூலம் வந்து வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன்.

"உழவன்" "Uzhavan" said...

//ஷ‌ஃபிக்ஸ்
வலைச்சரத்தின் மூலம் வந்து வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன்//
 
ரொம்ப நன்றி தம்பி.. பழைய பதிவைப் படித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தமைக்கு. :-)