வழக்கத்திற்கு
மாறாக
அதிகாலையிலேயே
எழுந்து
தன்னைச்
சுத்தப்படுத்தத் தொடங்குகிறாள்
அடர்சிவப்பில்
நகப்பூச்சு பூசிய
கால் மென்விரல்களிலிருந்து நீரூற்றுமவள்
இளஞ்சூடான
நீரால்
தன் பிளவுகளிலிருந்து
மூர்க்க
விரல்களின் தடங்களைத்
துடைத்தெறிகிறாள்
உச்சியிலிருந்து
உருளும் நீருருண்டைகள்
கவ்வி இழுக்கப்பட்ட இதழ்களின் வலிகளை
ஆசுவாசப்படுத்துகின்றன
நறுமணம்
கமழ வழிபாட்டுக்குத் தயாரான
தன்னுடலையே
அவள்
தொட்டு
வணங்குகிறபோது
வழிந்த
இரு துளிக் கண்ணீர்
காம்பில்பட்டு
வெம்மையாகி
அமிலமாய்
நிலத்தில் வீழ்ந்து
ஆண்மையை
எரிக்கிறது.
உழவன்
படம்: ஓவியர் மாருதி
No comments:
Post a Comment