Tuesday, April 22, 2014

வாக்குறுதிகள்


பொங்கி வழிந்த
பொய் வாக்குறுதிகள்
வீதிகளில் கிடந்து
காலைக் கடித்துக் கொண்டிருக்கின்றன.

அவைகள் காய்ந்து சருகுகளாக
இன்னும் சிலதின உச்சிவெயில்கள்
தேவைப்படலாம்.

அவைகளைக் கூட்டி அள்ளிப்
புதைத்து விடாதீர்கள்
எரித்து விடுங்கள்.


- உழவன்

1 comment:

ராமலக்ஷ்மி said...

ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்னும் சந்திக்கும் அவலம்.