Monday, May 2, 2011

மீனும் நானும்

தன் முன்னாலிருக்கும் மீன் குவியலில்
தண்ணீர் தெளித்துக்கொண்டேயிருக்கிறான்
மீன்காரன்.

ஒவ்வொரு முறையும் என்னை
அழகுபடுத்தி
கையில் காபி கொடுத்து
அனுப்பிக்கொண்டேயிருக்கிறாள்
அம்மா.

காலம் உதிர்ந்துகொண்டேயிருக்கிறது
செதில்களாகவும் நரைகளாகவும்.

உழவன்


20 comments:

ஷர்புதீன் said...

nice sir!

:)

Prabu Krishna said...

அழகான கவிதை.....

கீதமஞ்சரி said...

சமூக அவலம் சாடி நிதர்சனம் சொல்லும் வியக்கவைத்த ஒப்புமை. கவி அழகு.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
புகைப்படமும் அருமையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

கவிதை மிக நன்று. ஓவியமும் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் விதமாய் பொருத்தமான தேர்வு.

CS. Mohan Kumar said...

Arumai.

sakthi said...

மோகமுள் நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இக்கவிதை அப்படியே யமுனா சொல்வதை போல் இருக்கின்றது
நன்று உழவரே

rvelkannan said...

அழகாய் தெளிவாய் நல்லாயிருக்கு உழவன்

சாகம்பரி said...

மீனாவது விலை போய்விடும். பெண்ணுக்கு.....? kavithai gives complete justification to the story.
Thank you.

சாந்தி மாரியப்பன் said...

ஒப்பிட்ட விதம் அழகு..

"உழவன்" "Uzhavan" said...

@ ஷர்புதீன்
ரொம்ப நன்றி சார்

@ பலே பிரபு
பாராட்டியமைக்கு மிக்க நன்றி

"உழவன்" "Uzhavan" said...

@ கீதா
சமூக அவலம் சாடி நிதர்சனம் சொல்லும் வியக்கவைத்த ஒப்புமை. கவி அழகு.//
மகிழ்வாய் உணர்கிறேன். மிக்க நன்றி

@ Rathnavel
படம் மின்னஞ்சலில் வந்த ஒன்று. வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க

"உழவன்" "Uzhavan" said...

@ ராமலக்ஷ்மி
மகிழ்ச்சி. நன்றி

@ மோகன் குமார்
நன்றி

"உழவன்" "Uzhavan" said...

@ sakthi
மிக்க நன்றிங்க

@Vel Kannan
நன்றி நண்பா.. உயிர்மை கவிதைகளுக்கு வாழ்த்துகள்!

"உழவன்" "Uzhavan" said...

@ சாகம்பரி
ரொம்ப நன்றிங்க

@ அமைதிச்சாரல்
ரொம்ப நன்றிங்க சாரல்

க.பாலாசி said...

அதே..அதே..

சூப்பர்ங்க உழவன்..

ஆ.ஞானசேகரன் said...

அருமை....

புகைப்படம் சூப்பர்

Ashok D said...

hello நாங்கயெல்லாம் பாத்த மொதொ பொண்ணைய ஓக்கே பண்ணவங்க...

நல்லாயிருக்கு :)

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்கு நவனி!

//hello நாங்கயெல்லாம் பாத்த மொதொ பொண்ணைய ஓக்கே பண்ணவங்க//

நீங்க நல்லவங்கதான் அசோக். அவங்கதான் பாவம். :-)

"உழவன்" "Uzhavan" said...

@ க.பாலாசி
ரொம்ப நன்றி பாலாஜி

@ ஆ.ஞானசேகரன்
நன்றி நண்பா..

@ D.R.Ashok
நன்றி அசோக்.. உங்களுக்கு பாராவே பதில் சொல்லிட்டார் :-)

@ பா.ராஜாராம்
நன்றி..

//நீங்க நல்லவங்கதான் அசோக். அவங்கதான் பாவம். :-)//
சாதாரண பாவம் இல்லை; ஐயோ பாவம் :-))