Sunday, January 9, 2011

அஞ்சு நிலா


அகமதியின் ஆட்காட்டிவிரல் பிடித்து
நடந்து செல்லும்போது
அங்குமிங்குமாய்த் தேங்கியிருந்த மழை நீரில்
நிலாக்களை எண்ணத் தொடங்கினாள்.
அப்பா.. அஞ்சு நிலா என
உள்ளங்கை விரித்துச் சொன்னபோது
அவள் முகத்தில் ஒரு நிலா குடியேறியிருந்தது.

உழவன்

19 comments:

Chitra said...

so cute and sweet!

ராமலக்ஷ்மி said...

//அவள் முகத்தில் ஒரு நிலா குடியேறியிருந்தது.//

எங்கள் நெஞ்சிலும்:)!

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு உழவரே!

Anonymous said...

எங்கள் இதயத்தில் இடம் பிடித்து விட்டாள் இந்த குழந்தை நிலா..

ஆ.ஞானசேகரன் said...

cute.........

க.பாலாசி said...

அழகு நிலா...

விநாயக முருகன் said...

அழகு நிலா அஞ்சு விரல்களில்

"உழவன்" "Uzhavan" said...

@Chitra
@ ராமலக்ஷ்மி
@ பா.ராஜாராம்
@ தமிழரசி
@ ஆ.ஞானசேகரன்
@ க.பாலாசி
@ என்.விநாயகமுருகன்

நிலவை ரசித்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் நன்றி

Kavinaya said...

ச்வீட்! :)

"உழவன்" "Uzhavan" said...

@கவிநயா
ரொம்ப நன்றிங்க :-)

'பரிவை' சே.குமார் said...

மழலை நிலாவுக்கு என் வாழ்த்துக்கள்.

மாதேவி said...

அஞ்சு நிலா மனத்தைக் கொள்ளை கொள்கிறாள்.

"உழவன்" "Uzhavan" said...

@சே.குமார்
@மாதேவி

ரொம்ப நன்றிங்க :-)

Prabu Krishna said...

அருமை♥♥♥

"உழவன்" "Uzhavan" said...

//பலே பிரபு
அருமை♥♥♥//

மிக்க நன்றி

Issadeen Rilwan said...

வாசிக்கும் போது என் கண்களிலும் இரண்டு நிலாக்கள்

"உழவன்" "Uzhavan" said...

//Issadeen Rilwan - Changes Do Club
வாசிக்கும் போது என் கண்களிலும் இரண்டு நிலாக்கள்//

மொத்தம் எத்தனை நிலாதான் இருக்கு :-))) மிக்க மகிழ்ச்சிங்க. நன்றி

சிவகுமாரன் said...

பிஞ்சு நிலா காட்டிய அஞ்சு நிலா .
ஆகா

"உழவன்" "Uzhavan" said...

// சிவகுமாரன்
பிஞ்சு நிலா காட்டிய அஞ்சு நிலா .
ஆகா//

மிக்க நன்றி