Sunday, December 12, 2010

கவி ஆசை

சொற்களோடு வலுக்கட்டாயமாய்ப் புணர்ந்து
ஒவ்வொரு புணர்தலின் முடிவிலும்
அடிவயிற்றைத் தடவிப் பார்க்கிறேன்.
ஒரேயொரு கவிதையைக் கூடப் பிரசவிக்காமல்
மலடாகவே மாண்டிடுவேனோ எனப் பரிதவிக்கும்போதில்
யாருக்கேனும் குழந்தை பிறந்த செய்தி
வந்துகொண்டேதானிருக்கிறது.

உழவன்

7 comments:

ம.தி.சுதா said...

ஃஃஃஃயாருக்கேனும் குழந்தை பிறந்த செய்தி
வந்துகொண்டேதானிருக்கிறது.ஃஃஃ

அருமையாக உள்ளது..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
HUTCH வலையமைப்பு நிறுத்தப்படப் போகிறது

ஜெயந்த் கிருஷ்ணா said...

arumaiyaa irukkirathu.. kavithai varaa thrunankal..

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்கு:)!

'பரிவை' சே.குமார் said...

//யாருக்கேனும் குழந்தை பிறந்த செய்தி
வந்துகொண்டேதானிருக்கிறது//

அருமையாக உள்ளது..

க.பாலாசி said...

நல்ல கவிதை உழவன்..

arasan said...

நல்லா இருக்குங்க உழவரே

"உழவன்" "Uzhavan" said...

@ம.தி.சுதா
@வெறும்பய
@ராமலக்ஷ்மி
@சே.குமார்
@க.பாலாசி
@என்.விநாயகமுருகன் navina14@hotmail.com – சிரிப்பின் பொருள் என்னவோ? :-)
@அரசன்
@Chitra

அனைவருக்கும் நன்றி