Sunday, March 8, 2009

பெண்ணினமே வாழி நீ!

இயற்கை ரசிக்கும் ஓவியம் நீ
இடையில் குடம் சுமக்கும் அதிசயம் நீ
எவனும் தொழுகின்ற தாய் நீ
சிவனின் உருவத்தில் பாதி நீ
தவழும் குழந்தையறிந்த உலகம் நீ
உலவும் இளைஞன் அறிந்த காதலி நீ
வெட்கம் தெரிந்த ஒரேயினம் நீ
காதல் தந்த பூவினம் நீ
சிசு சுமக்கும் சிற்பம் நீ
சிகரம் தொடும் மேகம் நீ
தாயாய் தாரமாய் வீடாள்கிறாய் நீ
பாசமாய் காதலாய் உள்ளமாள்கிறாய் நீ
கட்டிலுக்கும் தொட்டிலுக்குமே
ஒரு காலத்தில் வாழ்ந்தாய் நீ
சட்டத்தையும் பட்டத்தையும்
எட்டிப்பிடித்தவளாய் இன்று நீ
சாலையோரச் சாப்பாட்டால்
சாகப் போகும் நாக்குக்கு
புதுப்புதுச் சுவையால் உயிரூட்டும்
ஏழாம் சுவை நீ
நொடிப் பொழுதில் விழியோரம்
உப்பு அருவி கொட்டுவாய் நீ
என்ன வரத்தால்தான் அதைப் பெற்றாய் நீ
மதுரையை எரித்த கோபமும் நீ
மஞ்சள் பூசும் சாந்தமும் நீ
பெண்ணாய்ப் பிறந்ததே
பெருமையென்று நினைப்பாய் நீ
எனைப் பெற்றெடுத்த
பெண்ணினமே வாழி நீ !
இக்கவிதை யூத்ஃபுல் விகடனில் 09.03.2009 ல் இடம்பெற்றுள்ளது.

http://youthful.vikatan.com/youth/uzhavanpoem090309.asp

3 comments:

intelligentwins said...

wow :D

sankarkumar said...

உங்க ப்லாக் அருமை

"உழவன்" "Uzhavan" said...

//உங்க ப்லாக் அருமை//

மிக்க நன்றி சங்கர். தங்கள் வருகை தொடர வேண்டுகிறேன்