Thursday, June 26, 2008

அம்மா !

நான் வணங்கும்     
சாமி நீ
எனைச் சுமந்த
பூமி நீ !
       
அறிவுகள்
ஆறும் ஐந்தும்
தொழுகின்ற
உறவு நீ !
 
அரைஞான் கயிறை
பிடித்துக்கொண்டு
அடித்தவளும் நீ
அடிக்கும் பொழுதே
அழுதவளும் நீ !
 
மூக்கொழுகி
நான் வந்தால்
மூக்கு பிடித்தவளும் நீ
முந்தானையில்
முடிந்து வைத்த
காசு கொடுத்து
முகம்
துடைத்தவளும் நீ !
 
எனக்காக மூச்சுவிடும்
உயிர் நீ
பிரபஞ்சத்தின்
முதல் எழுத்து நீ !
       
 
 

No comments: