Saturday, April 12, 2008

உழவங்க நாங்க ..

மாடு பூட்டி
உழவு ஓட்டி
வரப்பு வெட்டி
பாத்தி கட்டி
நடவு செஞ்சோம்
சாமிய நம்பி !

பொத்தி பொத்தி
வளர்த்த நாத்து
பெத்துத் தந்தது
உழக்கு நெல்லு !

வெளஞ்ச நெல்லு
களத்துல கெடக்கு
அடிச்சுத் தூத்த
காத்தும் இருக்கு !

குவிஞ்ச நெல்லு
நாலுபேரு வயித்துக்கு
மனசு இப்பதான்
குளுந்து போயிருக்கு !

உலகத்து பசிபோக்க
உழைக்கிறோம் உழவங்க நாங்க
எங்க குடி தழைக்கனும்
எல்லோரும் வாழ்த்துங்க !

உழவன்
tamil.uzhavan@gmail.com
http://tamizhodu.blogspot.com
http://tamiluzhavan.blogspot.com

1 comment:

சதங்கா (Sathanga) said...

உழவன்,

கவிதை அருமை. உழவர்களின் நிலைப்பாட்டை நன்றாக்ச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் !