பதினாறு வயதினில்
நடிக்க வந்த கவர்ச்சி நடிகை
இப்போது
பேரன் பேத்திகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவர்
ஏமாற்றத்தைக் கொலை செய்தவர்
நயவஞ்சகத்தைக் கொலை செய்தவர்
துரோகத்தைக் கொலை செய்தவர்
ஏளனப் பேச்சைக் கொலை செய்தவர்
ஒருபோதும்
தன்னைக் கொலை செய்யாதவர்.
- உழவன்
No comments:
Post a Comment