ஒரு பூ மலர்ந்திருக்கிறது
எப்படி
நடந்துகொள்ள வேண்டும்
என்று செடிகள் போதித்த
போதனைகளோடு
ஒரு பூ மலர்ந்திருக்கிறது.
பிறந்த
போதிலிருந்தே
செடிகளின்
போதனைகளோடு
மலர்ந்த அப்
பூ
கனியாகும்
வரை
நீங்கள்
எதிர்பார்க்கும்
ஒழுக்கத்துடனேயேதான்
வளரும்.
வண்டுகளுக்குத்தான்
போதனைகள்
சொல்லப்படவில்லை
இப்பூங்காவில்.
-உழவன்
1 comment:
அருமையான கவிதை.
Post a Comment