Sunday, July 3, 2011

பலி

பூச்சுற்றி
இறக்கை பிணைத்து
கால்கள் பிடித்து
காற்றில் விசிறி
கழுத்தை வெட்டியெறியும்போது
கருவறைக்குள்ளிருக்கும் காளியம்மாள்
தன் உள்ளங்கைகளால்
கண்ணை மூடிக்கொண்டுதானிருப்பாள்!

உழவன்

4 comments:

ராமலக்ஷ்மி said...

முக்காலும் உண்மை. நன்றாகச் சொன்னீர்கள்!

ஷர்புதீன் said...

நீங்களும் என் ரகம்தானா?

'பரிவை' சே.குமார் said...

நன்றாகச் சொன்னீர்கள்!

கீதமஞ்சரி said...

காளியம்மாவின் பேரைச் சொல்லி காவு கொடுத்துக் களிப்புறுகிறோம் நாம்! அசத்தல் சிந்தனை.